சென்னை: அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள புதிய சம்பள பட்டியல் பிரச்னை தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம், சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்ற ஊழியர்கள், கருவூல ஊழியர்கள் என தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
தமிழக அரசு வெளியிட்ட புதிய சம்பள பட்டியலில் பல்வேறு துறைகளில் சீனியர் பணியாளர்களை விட தற்போது பணிக்கு வந்த ஜூனியர் பணியாளர்களுக்கு அதிகமான சம்பளம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து நிதித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.