சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர் இடங்களுக்கு நடந்த தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வெளியானது. இதையடுத்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு கடந்த 8ம் தேதி சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய 4 நகரங்களில் எழுத்து தேர்வு நடந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக எழுத்துத்தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது.