சென்னை: திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப்பதிவாளர் அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அறிவித்தார். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருவதாகவும் அதன் காரணமாக அவருக்கு இந்த பதவி வழங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
- ஐக்கிய ஜனநாயக முன்னணி
- அமைச்சர் அக்ரி
- திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
- கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை
- அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம்