வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா இளையநல்லூர் கிராமத்தில் உள்ள குப்பிரெட்டித்தாங்கல் கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு துணை மின்நிலையத்திற்கென 60 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ஒரு சென்ட்டுக்கு ₹1,250 இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி 2014ம் ஆண்டு ேவலூர் நில ஆர்ஜித நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். அதில், ‘புதிய நில உரிமை சட்டத்தின்படி ஒரு சென்ட்டுக்கு ₹5 ஆயிரம் வழங்க வேண்டும்’ என கூறியிருந்தனர். இந்த வழக்கில், 1 சென்ட்டுக்கு ₹5 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கவில்லை.