கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆபத்தான கிணறை மூட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் உடனுறை அமராவதி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சங்கூரணி குளம் உள்ளது. இக்குளத்தின் ஓரத்தில் ஏற்கனவே பெரிய கிணறு இருந்தது. கிணற்றின் சுற்று பக்க கற்களை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து சென்று விட்டதால் தற்போது ஆபத்தான நிலையில் கிணறு உள்ளது. பயன்பாடற்ற இந்த கிணறு அருகே குடியிருப்புகள் உள்ளது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர் அப்பகுதியில் விளையாடுவது வழக்கம்.