சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர்கள் காத்திருக்கும் கூடம் அருகே நேற்று அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது அங்கிருந்த சிமெண்ட் பெஞ்ச் மீது வைக்கப்பட்டிருந்த கட்டை பையில் இருந்து சத்தம் கேட்டது. மருத்துவமனை ஊழியர்கள் பையை திறந்து பார்த்த போது அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் பெண் குழந்தை இருந்தது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்தனர்.