சென்னை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாருடைய தூண்டுதலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ல் அவருடைய முகாமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தது. இதை தொடர்ந்து உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்துக் கொண்டதாக புகார் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது தொடர்பாக முதல் அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்திருந்தது. அதில் விஷ்ணுபிரியா மரணத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இது தற்கொலை தான் எனவும் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருந்தது.