புதுடெல்லி: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.