தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் 80 சதவீதம் பேர் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கை திரும்ப பெற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: