மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1921 புள்ளிகள் உயர்ந்து 38,014இல் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 569 புள்ளிகள் அதிகரித்து 11,274இல் வணிகம் நிறைவடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பங்குச்சந்தை இன்று உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.