மும்பை: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அதிகரித்துள்ளது. நிறுவன வரிக்குறைப்பு அறிவிப்பை அடுத்து சென்செக்ஸ் ஒரே நாளில் 2,260 புள்ளிகள் உயர்ந்து 38,354 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் கடந்த 2014 மே 18ம் தேதி 6.22% என்ற உயர்வை விஞ்சி 6.25% அதிகரித்துள்ளது. சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு உயர்ந்ததால் பங்கு வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.