நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய, வரி குறைப்பு நடவடிக்கை உந்துதலாக அமையும். வேலைவாய்ப்பு பெருகவும் நிறுவன வரி குறைப்பு உதவும். இந்தியா தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடு என்ற சூழலை உருவாக்க அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகிறது. சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது அரசின் லட்சியம் என்று மோடி கூறியுள்ளார்.

Related Stories: