சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைத்ததை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.