கசகிஸ்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கசகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் ஆடவருக்கான 74 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சார்பில் சுஷில் குமார் பங்கேற்றார். இந்நிலையில், அவர் தகுதி சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.