×

தமிழ் காக்கும் போராட்டத்துக்கு இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: தமிழ் காக்கும் போராட்டத்துக்கு இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலையில் 18வது இணைய மாநாட்டில் தொடக்க விழாவில் பேசிய அவர், இணைய தகவல் தொடர்பில் தமிழை அதிக அளவில் பயன்படுத்தினால் தான் உயிரிப்புடன் வைக்க முடியும் என்றும், கெத்து, வச்சு செய்வேன் என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது, இளைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதனை பயன்படுத்துகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.


Tags : Mafa Pandiyarajan Youth ,Tamils ,Minister ,Mafoi Pandiyarajan , Tamil, Struggle, Youth,Minister Mafoi Pandiyarajan
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு