சென்னை : சென்னையில் கிரிக்கெட் விளையாடும் போது, மார்பில் பந்துப்பட்டு இந்திய கப்பல் படை வீரர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கப்பற்படை வீரர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜோகிந்தர். இவர் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கார்-நிக்கோவர் என்ற கப்பலில் வீரராக இருந்தார். இவர் நேற்று மலை ஐஎன்எஸ் அடையாறு உட்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது, கிரிக்கெட் பந்து நேரடியாக ஜோகிந்தர் மார்பில் பட்டு மயங்கி விழுந்தார்.