சென்னையில் கிரிக்கெட் விளையாடிய கடற்படை வீரர் மரணம் : சக வீரர் வீசிய பந்து நெஞ்சில் பட்டு உயிரிழந்த பரிதாபம்

சென்னை : சென்னையில் கிரிக்கெட் விளையாடும் போது, மார்பில் பந்துப்பட்டு இந்திய கப்பல் படை வீரர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கப்பற்படை வீரர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜோகிந்தர். இவர் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கார்-நிக்கோவர் என்ற கப்பலில் வீரராக இருந்தார். இவர் நேற்று மலை ஐஎன்எஸ் அடையாறு உட்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது, கிரிக்கெட் பந்து நேரடியாக ஜோகிந்தர் மார்பில் பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக அங்குள்ள கடற்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஜோகிந்தர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜோகிந்தரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: