சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்ற நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மொத்தம் 4,000 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன சான்றிதழ்கள், புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்த தகவல்களை உடனுக்குடன் மருத்துவ கல்வி இயக்குனரின் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.