சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்து 150 சவரன் நகை, 2.5 கிலோ வெள்ளி மற்றும் ரூ.2.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் தனியா இருந்த மனைவி ஜோதியை மெஸ்மரிசம் செய்து எதிர்வீட்டினர் நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளதாக வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி. பதிவிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.