பெய்ஜீங்: சீன ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற, பி.வி.சிந்து 2வது சுற்றிலேயே தோற்று வெளியேறினார். சீனா ஓபன் சூப்பர்1000 பேட்மின்டன் போட்டி சீனாவின் சாங்ச்சூ நகரில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத், சீனாவின் லு குவாங் சூ உடன் மோதினர். அதில் 21-19, 21-19 என்ற நேர் செட்களில் அசத்தலாக வென்றார். உலக அளவில் பிரனீத் 15வது நிலையிலும், லு 21 வது நிலையிலும் இருக்கின்றனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து உடன், தாய்லாந்தின் போர்ன்பவீ சோசூவாங் மோதினார். அதில் முதல் செட்டை அசத்தலாக வென்ற சிந்து அடுத்த 2 செட்களை போர்ன்பவீயிடம் இழந்தார். அதனால் போர்ன்பவீ 21-12, 13-21, 19-21 என்ற செட்களில் சிந்துவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.