டெஹ்ரான்: ஆசிய அளவிலான ஆண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா காலிறுதி சுற்றில் நடைப்பெற்ற 3 போட்டிகளிலும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆண்களுக்கான 20வது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றது. இந்தப் பிரிவில் 3ல் 2 போட்டிகளில் வென்று காலிறுதி சுற்றுப் போட்டிகளில் விளையாட தகுதிப் பெற்றது.காலிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா 0-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தொடர்ந்து ஈரானுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை 16-25 என்ற புள்ளி கணக்கில் எளிதில் இழந்தது. ஆனால் 2வது செட்டை 21-25 என்ற புள்ளி கணக்கில் போராடி இழந்தது.