கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திற்கு சென்ற மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவிற்கு எதிராக மாணவர்கள் கருப்பு கொடி காட்டி, உள்ளே விட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஆர்எஸ்எஸ்.சின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில் நேற்று கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ நேற்று சென்றார். ஆனால்,. பல்கலை.யின் நுழைவு வாயிலில் மாணவர்கள் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். பல்கலைக் கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் கலாச்சார பிரிவு மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சுப்ரியோவுக்கு கருப்புக்கொடி காட்டியதுடன், அவரை திரும்பி செல்லும்படி முழக்கமிட்டனர். இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பல்கலை நுழைவு வாயிலிலேயே அமைச்சர் காத்திருந்தார்.