சென்னை: நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணியாற்றியவர் தாமரை செல்வன் (55). இவர், பணியின்போது, போலியாக கையெழுத்து போட்டு, பண மோசடி செய்ததாக, நாகை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த 1997ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும், தாமரை செல்வனை கைது செய்து விசாரிக்க முடிவு செய்தபோது, அவர் தலைமறைவானார். கடந்த 22 ஆண்டுகளாக போலீசார் அவரை தேடி வந்தனர். மேலும், அவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்ததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக எஸ்பி அறிவித்தார்.