சென்னை : தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால், அதன்பின்னர் வார்டு மறுவரையறை, வழக்குகள் போன்ற காரணத்தினால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தள்ளப்போனது. அதோடு, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமனம் செய்ததோடு, உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.