திருவனந்தபுரம்: கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான 12 கோடி கொல்லத்தைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்களான 6 நண்பர்கள் சேர்ந்து வாங்கிய டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சார்பில் ஓணம் பம்பர் லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முதல் பரிசு 12 கோடியாகும். டிக்கெட் விலை 300. இந்நிலையில் லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. முதல் பரிசு ஆலப்புழாவில் விற்பனையான டிஎம்160869 என்ற டிக்கெட்டிற்கு கிடைத்தது. இதையடுத்து முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி யார் என்று கேரளாவில் ெபரும் பரபரப்பு நிலவியது.