சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறு ரிசர்வ் வங்கி அதிகாரி மீது வழக்குப்பதிய கோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்ட ரிசர்வ் வங்கி அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளரான இவர் ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த சிலநாட்களுக்கு முன் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சபரிமலை ஐயப்பன் குறித்து சில அவதூறு கருத்துகளை பதிவிட்டிருந்தார்.  

இதுகுறித்து திருவனந்தபுரம் பாப்பனங்கோடு பகுதி பா.ஜ. தலைவர் பிரகாஷ் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அஜித்குமாரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் நாராயணன் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரகாஷ் திருவனந்தபுரம் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாராயணன் மீது இபிகோ 295, 295ஏ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய ேபாலீசாருக்கு உத்தரவிட்டது.

Related Stories: