திருவனந்தபுரம்: கேரளாவில் பாலா சட்டப்பேரவை ெதாகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மீன்சந்தை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த மாநில மீன்வளத்துறை அமைச்சர் மெர்ஸி குட்டியம்மாவிற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலம் பாலா சட்டப்பேரவை தொகுதியில் வரும் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜ உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இந்த தொகுதியில் கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்ஸி குட்டியம்மா பிரசாரத்தில் ஈடுபட்டார்.