பெண்ணுக்கு டார்ச்சர் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

சேலம்: சேலம் வீராணம் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தவர் கலைசெல்வன்.   இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததாகவும், அவரது கணவரை அடித்து உதைத்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்தே வீராணம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த பெண்ணை டார்ச்சர் செய்துள்ளதுடன், அப்பெண்ணின் மகள் மற்றும் உறவினரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி  கமிஷனருக்கு அறிக்கை அளித்தனர். இதையடுத்து எஸ்.எஸ்.ஐ. கலைச்செல்வனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

Related Stories: