நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:  பிளஸ்2  பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்கும் நீட் கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?. மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அதிமுக அரசையும்  அம்பலப்படுத்துவோம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: