×

குற்றாலத்தில் மீண்டும் சாரல்

தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் முடிந்தாலும் சாரல் நன்றாக பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று இதமான சூழல் நிலவியது. காலை மற்றும் மதிய வேளைகளில் சாரல்  பெய்தது. இதமான காற்று வீசியது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளிலும், பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் அருவிகளில் தண்ணீர் நன்றாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். இதனால் ஆண்களும், பெண்களும், குழந்தைகள் என அனைவரும் சிரமமின்றி குளித்து மகிழ்கின்றனர்.

Tags : Courtallam Courtallam , Back , Courtallam
× RELATED குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு