திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சார்பு நீதிமன்ற நீதிபதி போல் போலி கையெழுத்து போட்டு வாடிக்கையாளர்களுக்கு சம்மன் வழங்கிய வங்கி மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் கடந்த 14ம் தேதி திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜோலார்பேட்டை கிளை, சுந்தரம்பள்ளி, விஷமங்கலம் என 3 கிளைகளை சேர்ந்த வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அசல், வட்டியை செலுத்த நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பினர். இதையடுத்து லோக் அதாலத் தீர்ப்பாயத்தின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குரிசிலாப்பட்டு கிளை மேலாளர் கோதண்டன் நீதிமன்றத்துக்கு தெரியாமல் வட்ட சட்டப்பணிகள் சார்பில் குரிசிலாப்பட்டு அருகே உள்ள வடுகமுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜோதிபாசு(35) என்பவருக்கு சார்பு நீதிபதி போல் போலியாக கையெழுத்து போட்டு ஒரு சம்மன் அனுப்பியுள்ளார்.
திருப்பத்தூர் அருகே பரபரப்பு நீதிபதி போல கையெழுத்திட்டு வாடிக்கையாளருக்கு சம்மன்: தலைமறைவான வங்கி மேலாளருக்கு வலை
- வாடிக்கையாளர்
- நீதிபதி நீதிபதி
- வாடிக்கையாளர்
- திருப்பட்டூர் ஒரு நீதிபதி
- ஹெட்லெஸ் வங்கி மேலாளர்
- Parappuram