பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 200 வருட பழமையான ஆலமரம் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்று படுகைகள், ஏரி, வரவு கால்வாய்களில் நீர்வரத்து துவங்கியுள்ளது. இத்தொடர் மழையால் விசைத்தறி நெசவு சம்பந்தமான பசை போடும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.