சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா வீட்டிற்கு தனிப்படை போலீசார் வருகை

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா வீட்டிற்கு தனிப்படை போலீசார் வந்துள்ளனர். உதித் சூர்யா வீட்டில் யாரும் இல்லாததால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பயிற்சி மையம் மூலமாக நீட் தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்துள்ளனரா எனவும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் 4 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: