சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பு கஞ்சா கடத்தி வந்த நபரை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆந்திராவிலிருந்து இன்று அதிகாலை சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ஹவுரா விரைவு ரயிலில் ஒருவர் கஞ்சா கடத்தி வந்துள்ளதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ரகசிய தகவலின் மூலம் கிடைத்த அடையாளத்துடன் அங்கு வந்த பாண்டி என்ற ரயில் பயணியை ரயில்வே போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.