சென்னை: தொகுப்பு டெண்டர் முறையை அறிமுகம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்கு ஒரே அறிவிப்பாணை மூலம் டெண்டர் கோரும் வகையில் தொகுப்பு டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொகுப்பு டெண்டர் முறைக்கு எதிராக வேலூர் ஒப்பந்ததாரர் கோவிந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.