திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். எம்.எம் நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது வடமதுரை பகுதியில் அக்னீ ஸ்கூல் ஆப் பிசினஸ் எக்சலென்ஸ் எனும் கல்லூரியை நடத்தி வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் கல்லூரி நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து நேற்றிரவு கன்னியப்பன் வேலைப்பளு காரணமாக கல்லூரியில் உள்ள ஓய்வறையிலேயே தங்கியுள்ளார்.