தமிழகப் போக்குவரத்துத்துறை திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சில பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்துவிடுகின்றனர். அவர்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக ஓட்டுகின்றனர். இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.