×

அந்நிய முதலீட்டாளர்களின் பங்குகளை விற்பது அதிகரித்ததும் இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் காணப்படுகிறது. இதனிடையே ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. காலை வர்த்தகத்தின்போது ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 350 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 100 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து 10,750 புள்ளிகளுக்கு கீழே சென்றது. அமெரிக்க மத்திய வங்கி, கடன் வட்டி விகிதத்தை எதிர்பார்ததபடி, கால் சதவீதம் குறைந்த போதிலும், வட்டி குறைப்பு நடவடிக்கை தொடர வாய்ப்பில்லை என்பது போல தெரிவித்தது.

இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் மத்தியில் எச்சரிக்கை உணர்வு காணப்படுவது, பங்குச்சந்தைகளில் களைப்பான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய பங்குச்சந்தைகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்குகளை விற்பது அதிகரித்ததும் சரிவுக்கு காரணமாகி விட்டது. வங்கி, ஆட்டோமொபைல், உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் விற்று தள்ளப்பட்டதால் குறியீட்டெண்களில் சரிவு ஏற்பட்டது. இதனிடையே ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.28,632-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.3,579-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Indian ,investors , Indian stock market, trading, today, decline
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்