சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் தமிழகத்தில் குறைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். அபராதத் தொகையை குஜராத், கர்நாடகம் போல் தமிழ்நாட்டிலும் குறைக்க அரசு முடிவு எடுத்துள்ளது என கூறினார். விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் தொகை குறைக்கப்படும் என கூறினார்.