சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவள்ளூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், அரியலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.