விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியை சேர்ந்த பொறியாளரான பாலமுருகனுக்கும் செம்படாக்குறிச்சியை சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் 7 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. புதன்கிழமை மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை சந்தோஷ் ஓட்டி வர, பின்னால் பாலமுருகனும் அவரையடுத்து பிரியதர்ஷினியும் அமர்ந்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி அம்மன்நகர் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றோரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனம் மீது மோதியதில் பிரியதர்ஷினி சாலை நடுவேயும் பாலமுருகனும், சந்தோஷும் சாலையோரமும் விழுந்தனர்.