சென்னை: முகலிவாக்கம் சிறுவன் தீனா உயிரிழப்புக்கு மாநகராட்சி காரணம் அல்ல என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சிறுவன் உயிரிழப்புக்கு மாநகராட்சி தான் காரணம் என்ற அமைச்சர் தங்கமணியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சிறுவன் உயிரிழப்புக்கு மின் துறை காரணம் கிடையாது என அமைச்சர் தங்கமணி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.