காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இரு காவல்நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பெண் சடலம் அகற்றப்படவில்லை. மதுராந்தகம் அடுத்த பாக்கம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அகற்றுவதில் மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் காவல் நிலையங்களுக்கு இடையே பிரச்சனை இருக்கிறது. பெண்ணின் சடலம் தமது காவல் நிலைய எல்லைக்குள் வரவில்லை என்றுகூறி போலீஸ் அகற்றுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.