தமிழகத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் தொழிலை வரைமுறைப்படுத்தி அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களில் பேனர் வைக்க அனுமதியுங்கள்

சென்னை:  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:சமீபத்தில் பேனர் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதன் காரணமாக டிஜிட்டல் பிரிண்டிங் தொழிலே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் டிஜிட்டல் பிரிண்டிங் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, டிஜிட்டல் பிரிண்டிங் தொழிலை வரைமுறைப்படுத்தி, அரசு அனுமதி அளிக்கும் இடங்களில் மட்டும் பேனர்கள் வைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: