கஞ்சா கடத்தி சிக்கிய 2 பேருக்கு குண்டாஸ்

அண்ணா நகர்: ஆந்திராவில் இருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டு கோயம்பேடு பேருந்துகளில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீசார் மாற்று உடையில் கண்காணித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி தஞ்சாவூரை சேர்ந்த விவேகானந்தன் (30) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்தனர்.

விசாரணையில் தஞ்சாவூருக்கு 20 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து இவர் மீது 31ம் தேதி அன்று குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இவருடைய கூட்டாளியை தேடி வந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்தவர் அகிலன் (26) என்பவர் போதை தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி சரண் அடைந்தார். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளி அகிலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Related Stories: