×

கோவை அருகே அட்டகாசம் செய்த யானைகள் விரட்டியடிப்பு

கோவை: கோவை அருகே வாளையார், கஞ்சிக்கோடு காட்டில் இருந்து வெளியேறிய 3 யானைகள் ஊருக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தின. இதனால் தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்நிலையில், வாளையார் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும், டிரம்ப்ஸ் அடித்தும் நேற்று முன்தினம் விரட்டினர். விரட்டப்பட்ட 3 யானைகள் கஞ்சிக்கோடு அருகே கொட்டேக்காடு ஆற்றில் சுகமாக குளியல் போட்டு, நீந்தி விளையாடியபடி வனப்பகுதிக்குள் புகுந்தது. காட்டுக்குள் சென்ற யானைகள் எந்த நேரத்திலும் மீண்டும் ஊருக்குள் வரலாம்.
அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Tags : Coimbatore , Rookie, elephants, chase
× RELATED மாற்றுத்திறனாளிகள், முதியோர் எளிதாக வாக்களிக்க ஏற்பாடு