ஊட்டி: நீலகிரியில் ஆண்டுதோறும் இரண்டு சீசன் கடைபிடிக்கப்படுகிறது. மார்ச்-ஜூன் வரையில் முதல் சீசனாகவும், செப்டம்பர்-நவம்பர் வரையில் 2வது சீசனாகவும் கடைபிடிக்கப்படுகிறது. முதல் சீசனில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படும். இரண்டாவது சீசனில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 1ம் தேதி முதல் இரண்டாம் சீசன் துவங்கி உள்ளது. இதற்காக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.