சென்னை: கடந்த 16 நாட்களில் 51 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீரை சேமிக்க கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 30 டிஎம்சி வரை கடலில் கலந்து வீணாகி இருப்பது தெரிய வந்துள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் மே 31ம் தேதி வரை தவணைகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் 177 டிஎம்சி தமிழக அரசுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சிக்கு பதில் 2.06 டிஎம்சியும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சிக்கு பதில் 7.44 டிஎம்சி மட்டுமே கர்நாடகா தந்தது. இது தொடர்பாக காவிரி ஆணையத்திடம் தமிழக அரசு புகார் அளித்தது. இதையடுத்து கர்நாடகாவுக்கு ஒப்பந்தப்படி தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டது.
கடந்த 16 நாட்களில் 51 டிஎம்சி நீர் கர்நாடகா திறப்பு: 30 டிஎம்சி கடலில் வீணாக கலப்பு: பரபரப்பு தகவல்கள் அம்பலம்
- டி.எம்.சி நீர் கர்நாடகா
- டி.எம்.சி கழிவு கலவை
- கடல்
- டி.எம்.சி வீணான கலவை
- கடல்: பரபரப்பான தகவல் அம்பலப்படுத்தப்பட்டது. 51 டி.எம்.சி நீர் கர்நாடகா