சிபிஐ விசாரிக்கும் நிலையிலும் குட்கா விற்பனை ஜோர் காவல்துறை இருக்கிறதா? மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: சிபிஐ விசாரிக்கும் நிலையிலும் குட்கா விற்பனை ஜோராக நடக்கிறது என்றும், காவல் துறை இருக்கிறதா? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வரை மாமூல் பெற்ற குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையிலும் குட்கா விற்பனை ஜோராக நடக்கிறது. காவல்துறை இருக்கிறதா? அல்லது இப்போதுள்ள டிஜிபியும் இதற்கு துணைப் போகிறாரா?. சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை தடுத்து நிறுத்துங்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: