பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே சூரியகுளம் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இக்குளத்தின் அருகே சுகாதார மையம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெரணமல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக இக்குளம் நிரம்பி வழிகிறது. இதனால், சுகாதார மையத்துக்கு வந்து செல்லும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.