சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.200 குறைந்தது: ஒரு சவரன் ரூ.28,800-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,600-க்கும் சவரன் ரூ.28,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.50.20-க்கு விற்பனையாகிறது. இன்று காலை சவரனுக்கு ரூ.112 குறைந்த நிலையில், மாலை ரூ.88 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888 விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3611க்கும், சவரன் ரூ.28,888க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்திருந்தது..

அதன்படி, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50க்கும், ஒரு கிலோ ரூ.50,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.200 குறைந்துள்ளது. உலக வர்த்தகத்தில் மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாறுதல் ஆகியவற்றால் உள்ளூர் சந்தையில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக உலக சந்தையில் பலநாடுகள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதன் காரணமாக அதன் விலை உச்சத்தை கண்டது. கடந்த 4ம் தேதி தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு, தங்கத்தின் விலை சரிவடைந்து சவரன் 29 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆனால், மீண்டும் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை 29 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: